பூக்குமா வசந்தம்… |
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய் காத்திருந்தேன் உன் நட்புக்காக எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன தெரியுமா உனக்கு உன்னோடு ஒருவனைப் பார்த்தால் உள்ளம் ஊமையாய் அழுதது நட்பினாலா காதலினாலா விடை தெரியா வினாக்கள் என்னுள் விளையாடி ஒய்ந்தன என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது உந்தன் வெட்கம் தானடி நான் தீர்மானித்து விட்டேன் என்னுள் இருப்பது நட்பல்லவடி அது நிச்சயமாய் காதல் தான் உன்னிடம் என் காதலைச் சொல்ல ஓராயிரம் தடவை முயன்று விட்டேன் விளைவு விபரீதம் ஆகி உன் நட்பும் என்னை பகைத்து விட்டால் முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது யாரும் அறியாமல் ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான் ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள் என் எண்ணம் உன்னை எட்டும் அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள் காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக பூக்குமா என் வாழ்விலும் வசந்தம் |
Labels: mathirajan
0 Comments:
Post a Comment
<< Home