பிறவி!
* பொருத்தம் பார்த்துதான்மண முடித்தோம்
பெரியோர் ஆசியுடன்...
* வருத்தமாகவே
பேசிக் கொள்கிறோம்
நம் மனதுக்குள்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்...
* விருந்தினர் முன் மட்டும்
மகிழ்ச்சியாய்
முகம் காட்டுகிறோம்
* மவுனம் கலையும்
காலங்களில் நாம்
பேசிக் கொள்வது பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளாகவே
நிறைவடைகிறது...
* மறுபிறவி பற்றி
எனக்குப் பயமில்லை
நம்பிக்கையில்லை... எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...
Labels: mathirajan
0 Comments:
Post a Comment
<< Home