மதிராஜனின் கவிதைகள்

Wednesday, September 09, 2009

பிறவி!


* பொருத்தம் பார்த்துதான்
மண முடித்தோம்
பெரியோர் ஆசியுடன்...

* வருத்தமாகவே
பேசிக் கொள்கிறோம்
நம் மனதுக்குள்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்...

* விருந்தினர் முன் மட்டும்
மகிழ்ச்சியாய்
முகம் காட்டுகிறோம்

* மவுனம் கலையும்
காலங்களில் நாம்
பேசிக் கொள்வது பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளாகவே
நிறைவடைகிறது...

* மறுபிறவி பற்றி
எனக்குப் பயமில்லை
நம்பிக்கையில்லை... எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home