மதிராஜனின் கவிதைகள்

Thursday, November 26, 2009

காதலில் விழுந்த கவிதை

விழிமலர உன் இதழ் விரிய சிந்திய சிரிப்பால்
வழித்தேடி என் மனம் நிறைந்ததே! பூரிப்பால்
முகம்மலர உனைநோக்கினனோ! அன்பால்
அகம்மகிழ உருக்குதென்னை காதல் பிறப்பால்

விண்ணிருக்கும் நிலவும் நீ என்பேனே!
கண்ணிருக்கும் பார்வையும் நீ என்பேனே!
கள்ளிருக்கும் இதழும் நீ என்பேனே!
உள்ளிருக்கும் உயிரே நீ என்பேனே...

விழிக்கூறும் உன் மௌன மொழிகூட தருதே சுவை
எழில்தரும் உன் நளினமும் தாங்குதே! காதலின் தேவை
எனை மீட்டும் உன் பெயரிலும் ஒரு அழகிய இசை
உனைத்தாங்கும் வரைதான்.. என் இதயம் துடித்திடவே ஆசை

மழையென நனைத்தாய் உயிர்வரை அன்பாய்
தழைத்தோங்கும் செடியென வாழும்வகை மாற்றினாய்
நினைத்தேங்கும் காதல் உள் நிரப்பி வைத்தாய்
அணைத்தேங்கும் நீராய் ஆசைகள் பூட்டி வைத்தாய்..

உறவென நீ வர எதிர்ப்பார்க்கும் என் நெஞ்சம்
சிறகெனவே பறக்கும் எனதாசைகள் உன்னிடமே தஞ்சம்
சிறு பிள்ளை ஆவேனே உன்னோடு நான் மஞ்சம்
திருநாளை வரவேற்க என் நாட்களும் கெஞ்சும்

இனிய மொழிப்பேச்சும் விழிவீச்சும் உன்னிடத்திலே
இனிக்கும் தருணங்கள் இனிவசமாகட்டும் என்னிடத்திலே
இனியவளே இனி என் வாழ்க்கை உன்னிடத்திலே
இனி உரைக்க என்ன உண்டு என்னிடத்திலே...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home