மதிராஜனின் கவிதைகள்

Sunday, June 24, 2007

மழைக் குறிப்பு!

மழையில் நனைந்தபடி
பறக்கும்
வண்ணத்து பூச்சி
பார்த்திருக்கிறாயா?

மழைத் துளியின்
ஓசைகளை
ரசித்திருக்கிறாயா?

மழைக்கால
இரவுகளின்
அழகை
அறிந்திருக்கிறாயா?

ஸ்நேகிதி
உன் குறிப்பேட்டின்
மழைக்கால
குறிப்பில்
என்னை
பதிவு
செய்திருக்கிறாயா??

0 Comments:

Post a Comment

<< Home